கள்ளக்குறிச்சி விவகாரம்: அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக-வினர் ஆளுநருடன் சந்திப்பு

மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி விவகாரம்: அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக-வினர் ஆளுநருடன் சந்திப்பு
Published on

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கள்ளச்சாராய விவகாரதம் தொடர்பாக கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

எதிர்கட்சிகள் சார்பில் மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வினர் சந்தித்தனர்.

சந்திப்பின் போது, கள்ளச்சாராய மரணம் குறித்து கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.வுக்கு இருக்கும் தொடர்பு குறித்து ஆளுநரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com