கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள்

தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள்
Published on

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவர்களும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எந்த தொகுதியிலாவது வெற்றி வாய்ப்பு இழந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கட்சிக் கூட்டங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும் அவர்கள் மனதில் கவலை நீங்கவில்லை. சில அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்றும் வழிபட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

கடந்த 2 மாதமாக ஒரு வித அச்சத்தில்தான் சில அமைச்சர்கள் காணப்பட்டனர். இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்ற பிறகே ஒவ்வொருவர் மனதிலும் வழக்கமான உற்சாகம் காணப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்திய அரசியல் அரங்கில் அவர் கம்பீரமாக சென்று வரும் வகையில் 40-க்கு 40 வெற்றி கிடைத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெருமைப்பட்டனர்.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், விஜய் வசந்த், சுதா ஆகியோர், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com