நான் என் அப்பா தோள் மீது ஏறி அரசியல் செய்யவில்லை..!- தமிழிசை சவுந்தரராஜன்

எனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
நான் என் அப்பா தோள் மீது ஏறி அரசியல் செய்யவில்லை..!- தமிழிசை சவுந்தரராஜன்
Published on

‘தமிழிசையை தோற்கடித்து மீண்டும் கவர்னராக்க செய்வோம்' என்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

இவரது கருத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் வேட்பாளருமான தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் என் அப்பா தோள் மீது ஏறி அரசியல் செய்யவில்லை, அப்படி செய்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும்.

அடிப்படையாக கட்சியில் சேர்ந்து உறுப்பினராகி, மாநில தலைவராகி, ஆளுநராக இருந்துள்ளேன்.

இது சுலபமான காரியமில்லை. எனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com