

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சுயநலம் பிடித்த திமுக, காங். கூட்டணியினர் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டனர்.
அரசியலில் பெண்களுக்கான இடத்தை கொடுக்க திமுக, காங்கிரஸ் விடவில்லை. வரும் தேர்தலில் திமுக கூட்டணியை பெண்கள் வீழ்த்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். உதயநிதியை எப்போதும் முதல்வராக்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.