என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்புத் தம்பி திருமாவளவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்- கமல்ஹாசன்
    X

    அன்புத் தம்பி திருமாவளவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்- கமல்ஹாசன்

    • திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு.
    • வருகிற 25ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது.

    மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது.

    அதன்படி ஒரு இடத்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வருகிற 25ஆம் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர்," அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×