என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமணம் மீறிய உறவை கைவிட மறுத்த மனைவி குத்தி கொலை - பாலக்கோடு அருகே பரபரப்பு
- பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
- நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் (35) இவரது மனைவி நிவேதிதா (30) இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 9 மற்றும் 7 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
நிவேதிதாவிற்கு அப்பகுதியில் உள்ள வேறு ஒரு வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பாக்கியராஜ் நிவேதிதாவை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து நிவேதிதா வாலிபருடன் பழகி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதிதாவின் தொண்டை பகுதியில் குத்தி உள்ளார்.
இதில் நிவேதிதா துடிதுடித்து ரத்தம் வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார். இன்று காலை தகலவறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் பாக்கியராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் மீறிய உறவை கைவிடாததால் கணவனே மனைவியை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






