என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விடுமுறை தினம்-சுபமுகூர்த்த நாள்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    விடுமுறை தினம்-சுபமுகூர்த்த நாள்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • கோவில் வளாகம் முழுவதும் மணமக்கள் கோலமாக காட்சியளித்தது.
    • தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தை மாதத்தில் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், மற்றும் வேன்களில் வந்து காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும், தை மாத கடைசி சுப முகூர்த்த நாளான இன்று கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் மணமக்கள் கோலமாக காட்சியளித்தது.

    இதனால் அங்கு வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தை மாதத்தில் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம் செய்ய வந்தவாறு உள்ளனர்.

    முன்னதாக, கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வ ரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் நகர எல்லைக்குள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பக்தர்கள் வாகனங்கள் தெருக்களில் நிறுத்தப்பட்டதால் உள்ளூர் பொதுமக்கள் எளிதாக அவசரமாக வெளியே வரமுடியாமல் திணறினர்.

    Next Story
    ×