

தமிழில் பேசி அசத்திய கவர்னர் ஆர்.என்.ரவிகவர்னர் ஆர்.என்.ரவி இன்று சட்டசபையில் தனது உரையை தொடங்கும் முன்பு மிக சரளமாக தமிழில் பேசினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வழக்கமாக வட மாநில தலைவர்கள் வணக்கம் என்று மட்டுமே தமிழில் சொல்வது உண்டு. ஆனால் இன்று கவர்னர் தொடக்க உரை சரளமாக தமிழில் அமைந்தது.
அவர் பேசுகையில், "மதிப்புக்குரிய சட்டமன்ற தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களே, சட்டமன்ற அலுவலர்களே, நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம்" என்று கூறினார்.