கரூர் தொடங்கி விவாகரத்து வரை... விஜயை துரத்துகிறதா 27ந்தேதி டைம்லைன்

விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
கரூர் தொடங்கி விவாகரத்து வரை... விஜயை துரத்துகிறதா 27ந்தேதி டைம்லைன்
Published on

பிரபல நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் பரவி வந்தது. இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

நடிகர் விஜய்யும் அரசியல், பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு தனியாகவே சென்று வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்- சங்கீதா விவாகரத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வித தகவல்கள், கருத்துகள் பரவி வரும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு திருப்பமும் ஒரே தேதியில் நடைபெறுவது தற்செயலா அல்லது திட்டமிட்ட உத்தியா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருவர் வெளியிட்ட பதிவே காரணம். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

27-ந்தேதியானால் விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. அதில் ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ள போஸ்டில் "27th Timeline - Coincidence?" என்று தொடங்கி கடந்த ஆறு மாத நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.

அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அவர்களை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்தது.

நவம்பர் 27-ந்தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது. (செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இணைப்பால் தவெகவுக்கு நன்மைதான்).

டிசம்பர் 27-ந்தேதி எச்.வினேத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' ஆடியோ வெளியிட்டு விழா, மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஜனவரி 27-ந்தேதி 'ஜன நாயகன்' பட சென்ஸார் தொடர்பான வழக்கு மீண்டும் புதிய விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

பிப் 27-ந்தேதி விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த செய்தி வெளியானது.

இப்படியாக பட்டியலிட்டு போஸ்ட்டின் இறுதியில் "Mar 27- Be Ready Guys" என்று கூறப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com