

அதிமுக-வில் எஸ்.பி. வேலுமணி- சிவி சண்முகம் தலைமையிலான அணி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அணிக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கி வருவதுடன், புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து வருகிறார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் இளம்பை ரா. தமிழ்ச்செல்வன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் மூலம் தெரிவித்துள்ளார்.