எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால் பதவியேற்க முடியவில்லை.
எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்
Published on

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர் கீர்த்தனா சான்றிதழை தன்னுடன் எடுத்து வராததால் பதவி ஏற்கவில்லை.

தொடர்ந்து திமுக, அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால் பதவியேற்க முடியவில்லை.

இந்நிலையில் பதவியேற்க அழைத்தபோது சிவி சண்முகம் சட்டசபையில் இல்லை. சட்டசபைக்கு வந்த சிவி சண்முகம் பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்திப்பதால் அக்கட்சியில் அதிருப்தி நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com