என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி- காங்கிரஸ் கட்சியினர் கைது
- இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வருகிறார்.
- பிரதமர் மோடி ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு ருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் பிரதமர் ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்திற்கு வர உள்ள பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கருப்பு கொடிகளை கைப்பற்றி காங்கிரசாரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






