

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் குவிய தொடங்கினர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மனதில் தங்கி நிற்கும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.