என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரெயில் பயணமாக காட்பாடி செல்கிறார் முதலமைச்சர்
    X

    ரெயில் பயணமாக காட்பாடி செல்கிறார் முதலமைச்சர்

    • காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • 26-ம் தேதி காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் பிரமாண்ட அரசு விழா நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலம் காட்பாடி செல்கிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை முதலமைச்சர் திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

    அதன் பிறகு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார். மாலை சுமார் 5 மணிக்கு அணைக்கட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலய கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்கிறார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் தங்குகிறார்.

    26-ம் தேதி காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் பிரமாண்ட அரசு விழா நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 25, 26 ஆகிய 2 நாட்கள் வேலூர், திருப்பத்துார் மாவட்டத்தில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×