என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திரு.வி.க. நகரில் அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
- சென்னையில் கட்டமைப்பு வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
- சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் மேலும் 19 பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகரில் ரூ.21.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்துவைத்த முதலமைச்சர் 10 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் கட்டமைப்பு வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
* சென்னையில் மேம்பாலங்கள், சுரங்கங்கள், மெட்ரோ ரெயில் என அனைத்தும் கொண்டுவரப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான்.
* சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் மேலும் 19 பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பார்த்து பார்த்து வடசென்னைப் பகுதியில் உட்கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம்.
* சென்னையில் 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டனர் என்பது நமக்கு தெரியும்.
* தற்போது எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
* மாநிலம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் ரூ.2,359 கோடி மதிப்பில் 19,000-க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது.
* சென்னை வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருப்பதற்கு தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






