12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளரவேண்டாம் என அறிவுரை மு.க.ஸ்டாலின்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Published on

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதனையொட்டி தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துகள். 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அன்பில் மகேஸை தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!

கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com