வக்பு திருத்த மசோதா- உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.
வக்பு திருத்த மசோதா- உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
Published on

வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வக்பு சொத்துகளை பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.

சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்.

வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.

சட்டத்தில் பல பிற்போக்குத்தனமான விதிகளுக்கு நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி.

உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மூலம் வக்பு உடமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com