ராணிப்பேட்டை அருகே பேருந்தும் வேனும் மோதி விபத்து- 4 பேர் பலி

காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே பேருந்தும் வேனும் மோதி விபத்து- 4 பேர் பலி
Published on

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் MBT சாலையில் பேருந்தும், ஈச்சர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com