தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருமொழிக் கொள்கை- அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை இலக்கு என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.
தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருமொழிக் கொள்கை- அமைச்சர் ராஜ்மோகன்
Published on

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார்.

அப்போது, அரசு பள்ளியில் சேர்ந்த மழலைகளை வாழ்த்தி மாலை அணிவித்து அமைச்சர் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்," தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு 1.52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருக்கிறது.

அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகளுடன் கூடிய கழிவறைகள் திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com