பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்: தமிழக அரசு பஸ்கள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன

ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன. தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்: தமிழக அரசு பஸ்கள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன
Published on

ஓசூர்:

காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் இன்று கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ் சங்கம் உள்பட 150க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இதையொட்டி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன. அதே போல், இரவு 12 மணிக்குள் அனைத்து தமிழக பஸ்களும் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி திரும்பிவிட்டன.

பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி, 400-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் பெங்களூரு சென்று வருகின்றன.

மேலும் சில தனியார் பஸ்களும் பெங்களூரு சென்றன. தமிழக அரசு பஸ்கள், பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லைவரை மட்டும் சென்று வந்தன. தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com