தலைமைச் செயலகம் வந்த மு.க. அழகிரி மகள்- அமைச்சர்களை சந்தித்து பேச்சு

தலைமைச் செயலகம் சென்றிருந்த மு.க. அழகிரி மகள் கயல்விழி, அமைச்சர்களை சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளார்.
தலைமைச் செயலகம் வந்த மு.க. அழகிரி மகள்- அமைச்சர்களை சந்தித்து பேச்சு
Published on

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. அழகிரி அரசியலில் ஈடுபடாமல் தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், மதுரையில் இன்றும் அவருக்கெ தனி செல்வாக்கு உள்ளது. அவருக்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் உள்ளனர்.

விஜய் முதல்வராக பதவி ஏற்ற விழாவிலும் கலந்து கொண்டார்

முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவி ஏற்றபோது அவரது மகள் கயல்விழி, நேரு மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர், “மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். விஜய் வரலாறு படைத்துள்ளார்” என புகழ்ந்து பேசினார்.

அமைச்சர்களுடன் சந்திப்பு

இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்திருந்தார். முதலமைச்சர் விஜயை சந்தித்து பேச வந்ததாக தெரிகிறது. ஆனால், முதலமைச்சர் விஜயை பார்க்கவில்லையாம். அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்புக்குப்பின் அவர் கூறுகையில் “பதிவு ஏற்றுக் கொண்ட அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கயல்வழி த.வெ.க.-வில் இணைய இருப்பதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், மேயர் பதவிக்கு குறிவைப்பதாகவும் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com