விடிய விடிய கனமழை: மாடி கட்டிடம் இடிந்து சாலையில் விழுந்தது

கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
விடிய விடிய கனமழை: மாடி கட்டிடம் இடிந்து சாலையில் விழுந்தது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் திருப்பாதிரிப்புலியூரில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மாடி கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் பாழடைந்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தாமல் பூட்டிய நிலையில் இருந்து வந்தது . இந்நிலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இன்று அதிகாலை பாந்து இருந்த கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடிந்த சுவரை சுற்றி இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்து இடிந்து விழுந்த கட்டிடஇடிபாடுகளை அங்கிருந்து அகற்றினர். மேலும் கோவில் செயல் அலுவலர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார் . கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com