AR Rahman | நெம்மேலியில் உள்ள தர்காவின் 353-ம் ஆண்டு சந்தனகூடு விழாவில் பங்கேற்ற ஏ.ஆர்.ரகுமான்

ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 353-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொண்டாடப்பட்டது.
AR Rahman
AR Rahman
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா" அவர்களின் 353-ம் ஆண்டு கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.

இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜமாத்தார் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com