“திமுக, காங்கிரஸைத் தவிர தொகுதி மறுவரையறையில் யாருக்கும் எந்த பிரச்னையுமில்லை” - அண்ணாமலை

ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தி.மு.க மற்றும் காங்கிரஸிற்கு எதிராகத் தீர்க்கமாக வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“திமுக, காங்கிரஸைத் தவிர தொகுதி மறுவரையறையில் யாருக்கும் எந்த பிரச்னையுமில்லை” - அண்ணாமலை
Published on

சென்னையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அண்ணாமலை,

“தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தின் இட ஒதுக்கீடும் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் என்னதான் பிரச்சனை என்று எனக்குப் புரியவே இல்லை.

தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் 23.7%-லிருந்து 23.9% ஆகச் சற்று உயர்ந்துள்ளது. எனவே, தி.மு.க மற்றும் காங்கிரஸைத் தவிர யாருக்கும் இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தி.மு.க தனது வாரிசு அரசியலை வளர்க்க விரும்புகிறது.

தமிழ்நாடு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 23-ஆம் தேதி அவர்கள் தி.மு.க மற்றும் காங்கிரஸிற்கு எதிராகத் தீர்க்கமாக வாக்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்கள் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். அவர் பதவியேற்ற முதல் 100 நாட்களில் கஞ்சா ஒழிப்புச் சிறப்புப் படை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்காக 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com