பவானியில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை: வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு, மேட்டூர் மெயின் ரோடு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
பவானியில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பவானியில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Published on

பவானி:

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பொதுமக்களும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அண்ணாமலை ஏற்கனவே தனது 2 கட்ட நடைபயணத்தை முடித்து நேற்று அவிநாசியில் தனது 3-வது கட்ட நடைபயணத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கோவையில் இருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானிக்கு என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை வந்தார். பவானி கூடுதுறை பிரிவு ரோட்டில் வந்த அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை பவானி கூடுதுறை பிரிவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டு இருந்த குழந்தைகள் அண்ணாமலைக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பெண்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

ஈரோடு, மேட்டூர் மெயின் ரோடு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்களை சந்திக்கிறார். பின்னர் அந்தியூர் பிரிவு ரோட்டில் திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

அதன் பிறகு இன்று மாலை 4.30 மணியளவில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலையில் இருந்து அண்ணாமலை மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்குகிறார். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் பாதயாத்திரையை முடித்து கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com