என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சர் நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் - அன்புமணி
    X

    வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சர் நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் - அன்புமணி

    • 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.

    சென்னையில் சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    * பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தவறு.

    * 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    * ஆனால் வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீடு இடஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது.

    * வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தருவோமென நம்பவைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.

    * இடஒதுக்கீடு தொடர்பாக திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாமென முதலமைச்சர் கூறினார்.

    * பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.

    * தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    * பின்தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலைவாய்ப்பும் வேண்டும், அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×