கோயம்பேட்டில் வேறு ஏதாவது அமைத்தால்.... அன்புமணி ராமதாஸ்

கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
கோயம்பேட்டில் வேறு ஏதாவது அமைத்தால்.... அன்புமணி ராமதாஸ்
Published on

விழுப்புரம்:

கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தி என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.

* கோயம்பேட்டில் வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்.

* பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.

* கூட்டணி குறித்து பா.ம.க. நிறுவனர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com