என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடுக - அன்புமணி
- சமூக பொருளாதார மாற்றங்களையும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கையையும் பிரித்து பார்க்க முடியாது.
- இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* நீதிபதி குரியன் குழு ஆய்வு, இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடுக.
* 69% இடஒதுக்கீட்டால் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.
* சமூகநீதியின் பயன் குறித்த விவரத்தை முழுமையாக வெளியிடாமல் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஆய்வு செய்வது அர்த்தமற்றது.
* சமூக பொருளாதார மாற்றங்களையும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கையையும் பிரித்து பார்க்க முடியாது.
* இடஒதுக்கீட்டால் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






