பா.ம.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாவட்ட வாரியாக நேர்காணல் தொடங்கினார் அன்புமணி

பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
பா.ம.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாவட்ட வாரியாக நேர்காணல் தொடங்கினார் அன்புமணி
Published on

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.ம.க. இடம் பெற்றுள்ளது.

இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தார்கள்.

விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் டாக்டர் அன்புமணி இன்று நேர்காணல் நடத்தினார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்று காலையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.

நாளை (28-ந்தேதி) காலையில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் மாலையில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் நடக்கிறது.

தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com