கரூர் பெருந்துயரம் குறித்து அமைச்சர் ஆதவ் பேச்சு..!- உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு

தவெக இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசினார்.
Minister Adhav arjuna
Published on

கரூர் பெருந்துயரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் 41 பேர் மரணமடைந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையை வைத்துக்கொண்டு கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார் என ஆதவ் அர்ஜூனா நேற்று தவெக இணைப்பு விழாவில் ஆவேசமாக பேசினார்.

நேற்று விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விடமாட்டோம் என கூறியிருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com