Rajinikanth | ரஜினிகாந்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா

ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன் அக்கட்சி நிர்வாகி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா
Published on

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. மிரட்டலால் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, கொளத்தூரில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசுகையில், ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் விளக்கம் கொடுக்க வேண்டும் . நான் இன்று நல்ல நிலைமையில் நேர்மையாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினிகாந்த் என தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார்.

தலைவர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. தி.மு.க.வின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன்.

நான் சொல்லவந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்க வரவில்லை. ரஜினிகாந்த் அறிக்கை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com