

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* தி.மு.க.வில் இன்று கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் இல்லை.
* சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
* மக்களின் தீர்ப்பை தான் ஜனநாயக சக்திகள் செயல்படுத்தி உள்ளன.
* தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.
* ஆ.ராசாவை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டிக்க வேண்டும்.
* பெண்ணின் உறவை வைத்து பேசும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி ஒரு கட்சியின் தலைவரை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட பதிவினை கடுமையாக கண்டிக்கிறோம் என்றார்.