என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    10-ந்தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்...
    X

    10-ந்தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்...

    • தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியல் இயல்பைவிட அதிகமாக பதிவாகும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகிற 10-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    11-ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியல் இயல்பைவிட அதிகமாக பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக்கூடும்.

    Next Story
    ×