சோளக்காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது- மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையன், ராமர் 2 பேரையும் கைது செய்தனர்.
நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்த 2 பேரை படத்தில் காணலாம்.
நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்த 2 பேரை படத்தில் காணலாம்.
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு உள்ளது.

இந்நிலையில் ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதைப்போல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர்-மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலனி தடங்கள் இருந்தன.

இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு பகுதியில் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் ரமேஷ் காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது நாட்டு துப்பாக்கியைத் தேடி அதே பகுதியை சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் நண்பர்கள். மேலும் 2 பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

வேட்டைக்கு செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர்.

இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையன், ராமர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com