என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- காப்பக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
- குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர்.
- குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர்.
சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊமனாஞ்சேரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்ப உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காப்பகத்திற்கு ஆய்வுக்கு வந்த குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமானது.
Next Story






