மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்- 5 பேர் கைது

கடந்த வாரம் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்- 5 பேர் கைது
Published on

சென்னை அடுத்த மாதவரம் ரோஜா நகரில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர் கைதானார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஹாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமார், ஜான்சி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது.

தமிழகத்திலேயே அதிகபட்ச அளவாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com