ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்- அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்.

மூன்றாம் பாலினத்தவர்கள் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை. மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.35 கோடி கேட்டு உள்ளோம். மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை.

நூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆட்கள் மூலம் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com