

கொரோனா தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் 10, 11 வகுப்பில் எடுத்த மதிப்பெண்களில் முறையே 30 சதவீதம், 12-ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் என மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியானது. மதிப்பெண்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணையதளம் வழியாகவோ பள்ளிகளிலோ மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...அனைவரையும் திருப்திப்படுத்துவது சவாலானது: பசவராஜ் பொம்மை பேட்டி