செங்கல்பட்டு மாவட்டத்தில் 985 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக பரங்கிமலை பகுதியில் 158 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல்லாவரத்தில் 135 பேரும், காட்டாங்குளத்தூரில் 79 பேரும், திருப்போரூரில் 74 பேரும், பெருங்களத்தூரில் 41 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தாம்பரத்தில் 72 பேரும், பம்மலில் 43 பேரும், கன்டோன்மென்ட்டில் 34 பேரும், மறைமலை நகரில் 25 பேரும், மதுராந்தகத்தில் 21 பேரும், செம்பாக்கத்தில் 25 பேரும், கூடுவாஞ்சேரியில் 24 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com