search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒட்டன்சத்திரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
    X

    ஒட்டன்சத்திரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி

    • கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    கரூர் மாவட்டம் சீத்தம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது59), சேகர் (35). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (24). மில் தொழிலாளி. அவரது நண்பர் துரையன் (21). பெயிண்டர். 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×