

சென்னை:
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக தெரிகிறது. தனது ராஜினாமா முடிவை முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டார். இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக சண்முகசுந்தரம் கூறி உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை, கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.