search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ, கி.வீரமணி தலா ரூ.10 லட்சம் வழங்கினர்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ, கி.வீரமணி தலா ரூ.10 லட்சம் வழங்கினர்

    • மிச்சாங் புயலால் வரலாறு காணாத பேய் மழையும், வெள்ளமும் தலை நகரை மூழ்கடித்துவிட்டது.
    • தொழில் அதிபர்களும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கினார்கள்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் நிதி வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-


    மிச்சாங் புயலால் வரலாறு காணாத பேய் மழையும், வெள்ளமும் தலை நகரை மூழ்கடித்துவிட்டது , கடல் அலை 10 அடி உயரம் வந்ததால் கடல் வெள்ள நீரை உள்வாங்கவில்லை.

    திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டு தலால் அனைத்து துறை அதிகாரிகளும் இரவு பகலாக பணியாற்றி மக்களை மீட்டுள்ளனர்.

    ரூ.5 ஆயிரம் கோடி கேட்டதில் 20 சதவீதத்தையே மத்திய அரசு கொடுத்து உள்ளது. முன்பு பா.ஜ.க. வுடன் கூட்டு வைத்திருந்தவர்கள், பா.ஜ.க.விடம் பேசி அந்த நிதியை பெற்றுத் தரலாமே..?


    ம.தி.மு.க. சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியம் மற்றும் ம.தி.மு.க. கட்சி நிதி என மொத்தம் ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காசோலையாக ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    மேலும் தொழில் அதிபர்களும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கினார்கள்.

    Next Story
    ×