search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 2-ந்தேதி முதல் 3 நாட்கள் பா.ம.க. அமைப்புகளுடன் ராமதாஸ் ஆலோசனை
    X

    வருகிற 2-ந்தேதி முதல் 3 நாட்கள் பா.ம.க. அமைப்புகளுடன் ராமதாஸ் ஆலோசனை

    • பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் அட்டவணைப் படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும்.
    • அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கட்சி வளர்ச்சிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பா.ம.க. தலைமை முடிவு செய்திருக்கிறது. பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப் படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    2.5.2024 (வியாழக்கிழமை) காலை 11 மணி-பா.ம.க. இளைஞரணி

    3.5.2024 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி-பா.ம.க. மாணவரணி

    4.5.2024 (சனிக்கிழமை )காலை 11 மணி- பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

    மேற்கண்ட கூட்டங்களில் தொடர்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×