search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தில் இருந்து மீட்க நள்ளிரவில் கவர்னர் நடவடிக்கை
    X

    வெள்ளத்தில் இருந்து மீட்க நள்ளிரவில் கவர்னர் நடவடிக்கை

    • பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை.
    • நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    பெரு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி உள்ளன. இன்னும் பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உமரி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் மூன்று நாட்களாக தங்கள் கிராமத்தினர் வெளியேற முடியாமலும் யாரும் உதவிக்கு வராமலும் தவித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதை பார்த்ததும் நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலெக்டரும் அதை பார்த்துவிட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் தூங்காமல் பணியாற்றிய நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×