2 மாநிலம் இடையே பஸ்களை இயக்க ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பே நடவடிக்கை- அமைச்சர் தகவல்

வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது.
2 மாநிலம் இடையே பஸ்களை இயக்க ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பே நடவடிக்கை- அமைச்சர் தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், வாணியம்பாடியில் இருந்து வெலதிகா மணிபெண்டா வழியாக பெங்களூரு, கோலார் தங்க வயல் மற்றும் சித்தூருக்கு பஸ்கள் இயக்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.

மேலும், வெலதிகாமணி பெண்டாகிராமம் தமிழக ஆந்திர மாநில எல்லையில் வருவதால் இரண்டு மாநிலத்திற்கு இடையே இயக்க ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பே பஸ்களை இயக்க முடியும். மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது. தற்போது வாணியம்பாடியில் இருந்து மினி பஸ் மட்டும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com