பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், துணை முதலமைச்சர்

பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார். முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் கவர்ன, துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், துணை முதலமைச்சர்
Published on

சென்னை:

சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கியது. இதில் 3638 பேர் பட்டம் பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவியும் . பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுள்ளனர். இருவரும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் கவர்ன, துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com