என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- துரைமுருகன் பேச்சு
- வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க .சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
- வள்ளுவர் கோட்டத்தை போல் கருணாநிதிக்கு திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டியிருக்கிறார்கள்.
வேலுார்:
வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க .சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.வில் ஒரு தொகுதிக்கு புதிதாக 50 ஆயிரம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும். இது மாபெறும் பணி. சாதாரணமாக சேருங்கள் என்று சொல்லியிருந்தால் விரைந்து செய்திருப்பீர்கள்.
ஆனால், அதில் பல நிபந்தனைகள் விதித்திருக்கிறோம். அதனால், கட்சி கொள்கைகள் குறித்து அனைவரிடத்திலும் விளக்கி கூறி சேர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதை நீங்கள் செய்து வருகிறீர்கள். இதற்காக நீங்கள் பாராட்டும், வாழ்த்தும் பெற வேண்டும் என்றால் காரியத்தை முறையாக செய்ய வேண்டும்.
கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நடக்கிறது. ஒரு ஆண்டு முழுவதும் இதை கொண்டாட இருக்கிறோம்.
வள்ளுவர் கோட்டத்தை போல் கருணாநிதிக்கு திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டியிருக்கிறார்கள். அதை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரும் ஜூன் 3-ந் தேதி திறந்து வைக்கிறார்.
அதற்கு முன்னோட்டமாக சென்னை கிண்டியில் கட்டபட்டுள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியை ஜனாதிபதி திறக்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து சில மாதத்தில் மதுரையில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகத்தையும் திறக்க போகிறோம். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வேலுாரிலும் ஜூலை முதல் வாரத்தில் பிரம்மாண்டமான விழா நடத்த இருக்கிறோம். அதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருவதாக உறுதியளித்திருக்கிறார்.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதே நேரத்தில் ஒருசில சங்கடங்களும் வருவது போன்று தோன்றும், அது ஒரு மாயை. அதைப்பற்றி கவலைப்பட கூடாது. கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்