search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா அறிவாலயத்தில் 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
    X

    அண்ணா அறிவாலயத்தில் 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
    • நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம், கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு, வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். கலைஞர் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சிப் பாசறை உள்ளிட்ட இளைஞர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×