search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்- அர்ஜுன் சம்பத்
    X

    தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்- அர்ஜுன் சம்பத்

    • கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.
    • கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும்.

    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் வந்தே மாதரம் ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கு சென்று அதன் பிறகு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ரத யாத்திரை வந்தது. நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் வந்து பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் ரத யாத்திரையானது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வேலூர் கோட்டையில் இருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த ரத யாத்திரை செல்ல இருக்கிறது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

    ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த மண்ணான சென்னிமலைக்கு சென்று வந்தோம். இதைத்தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும். போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்று உள்ளனர். மின் கட்டண உயர்வுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×