search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீர் குழாயில் உடைப்பு
    X

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீர் குழாயில் உடைப்பு

    • சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது.
    • அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது.

    பூந்தமல்லி:

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் உள்ள மழை நீர் அவ்வப்போது சென்னை மக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை கொல்லசேரி அருகே கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் வெளியில் பீய்ச்சி அடித்து அருவி போல் மேல் நோக்கி பாய்ந்து கொட்டுகிறது. இதனால் தண்ணீர் வீணாக ஆறாக தரையில் ஓடுகிறது.

    இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயை உடனடியாக சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×